×

இந்தியா குறித்து விமர்சனம் பிரதமர் மீது அவதூறு வழக்கு பாயாதா? முதல்வர் சித்தராமையா பதிலடி

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரான ‘இந்தியா’வை கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகியவற்றிலும் வருகிறது. அதற்காக அவர்கள் இந்தியாவின் நலனுக்காக செயல்பட்டவர்களா என்று பிரதமர் மோடி விமர்சித்தார். பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட் செய்துள்ள முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரான இந்தியாவை, கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் பிரதமர் ஒப்பிட்டுள்ளார். நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் இந்திய மக்களின் வரிப்பணத்தில் நூற்றுக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடி விட்டனர். உங்கள் பெயரும் மோடி தான். எனவே அவர்களை உங்களுடன் ஒப்பிட முடியுமா? அழகான, புனிதமான இந்தியாவின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? உங்கள் அரசின் திட்டங்களுக்கு மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா என்றெல்லாம் பெயர் சூட்டினீர்களே.. அதையெல்லாம் மாற்றுவீர்களா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

The post இந்தியா குறித்து விமர்சனம் பிரதமர் மீது அவதூறு வழக்கு பாயாதா? முதல்வர் சித்தராமையா பதிலடி appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,East India Company ,Indian Mujahideen ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...